மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் 170 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு பெண்களுக்கு ரத்த சோகை தொடர்பான நோய்கள் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.