தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருகிற 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதுநிலை படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.