காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத் தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இந்நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி நீக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.