நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சற்றுமுன் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரே நாள் இரவில் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.