வரும் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார்  இணைக்கப்பட வேண்டும் என வருமான வ ரித்துறை தெரிவித்துள்ளது. பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில் மார்ச் 30, 2023 வரை கொடுக்கப்பட்ட அவகாசம் பின்னர் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 31-ம் தேதிக்கு பின்னர் இணைப்பவர்கள் ரூ.1000 அபராதமாக செலுத்தி இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இணைக்காவிட்டால் பான் அட்டை செயலற்றதாகிவிடும். இந்த பான் அட்டை மூலம் வரிதாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வரி தாக்கல் நடைமுறையில் மேற்கொள்ளப்படாது. மேலும் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்டு தொகையும் செயலற்ற அந்த பான் அட்டைக்கு செலுத்தப்படாது. இது போன்ற பல்வேறு சிக்கல்களை ஆதார்- பான் இணைகாதவர்கள் நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.