மகாராஷ்டிர மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட நடிகை பூஜா ஹெக்டே 2012-ஆம் ஆண்டு தமிழில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் பூஜா ஹெக்டே வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். பின் கடந்த ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் அவர் பகிர்ந்த போட்டோக்களை பார்த்து பதறிய ரசிகர்கள் யாருக்கு கல்யாணம்? மணப்பெண் யார்? என்று குழம்பி போய் உள்ளனர். அதாவது நடிகை பூஜா தனது அண்ணனின் திருமண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் பட்டு சேலையில், அவர் மணப்பெண்ணுக்கு போட்டியாக ஜொலித்து உள்ளதை பார்த்த ரசிகர்கள் பூஜாவுக்கு திருமணம் என நினைத்து ஷாக் ஆகி விட்டார்கள்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து அவர் ‘அண்ணன் திருமணத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறேன், குழந்தையைப் போல சிரித்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணா உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, நீங்கள் கட்டுப்பாடில்லாமல் நேசிப்பீர்கள். உங்கள் முழு மனதையும் கொடுத்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வீர்கள் என நம்புகிறேன். என் அண்ணனின்  அழகான அற்புதமான மனைவியை, எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம் என்றும்  அவர் பதிவிட்டுள்ளார்.