தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ் நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌரி பாலா, அபிராமி(23) என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இதில் இளைய மகள் அபிராமி பியூட்டிஷியன் ஆக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வேலை விஷயமாக அபிராமி சென்னைக்கு சென்று விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார். நேற்று காலை கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அபிராமி இறந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிராமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மர்மமான மரணம் என போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.