தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட நடிகரும் டைரக்டருமான நடிகர் சசிக்குமார் நடித்து சமீபத்தில் வெளியான “அயோத்தி” படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் “நந்தன்” என்ற புது திரைப்பட சூட்டிங்கில் பங்கேற்க வந்த நடிகர் சசிக்குமார், அயோத்தி படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

இதையடுத்து சசிக்குமார் பேசியதாவது “சாதி, மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற விஷயம் இந்த படத்தின் கூறப்பட்டுள்ளது. அதோடு நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற, எல்லோரும் கடந்து வந்துள்ள செய்தியைத்தான் இந்த படத்தில் கூறியிருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.