சமூக வலைத்தளங்களில் ஒரு FPV ட்ரோன் (First Person View Drone) மூலம் எடுக்கப்பட்ட, ஓடும் ரயிலின் பிரமிக்க வைக்கும் காட்சி வீடியோ (Unbelievable Train Shot) ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படக் கலைஞர் (Photographer) வெளியிட்ட இந்த ரீல் வீடியோ, இரண்டு நாட்களில் 150 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளை அள்ளி, இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இந்த வீடியோவின் உண்மை என்னவென்று மக்கள் குழப்பமடைந்த நிலையில், வைரல் வீடியோவின் ரகசியத்தை வெளியிடும் வேறு ஒரு வீடியோவைப் புகைப்படக் கலைஞர் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vivek Satpute (@viveksatpute29)

சமீபத்தில் வெளியிட்ட விளக்க வீடியோவில், இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் முழுவதும் உண்மையானவை இல்லை என்றும், அதன் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (AI) பயன்படுத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

 

View this post on Instagram

 

A post shared by Vivek Satpute (@viveksatpute29)

“ஓடும் ரயிலில் இருந்துப் புறம்போன்று இது போன்ற ஆபத்தான ஷாட்களை எடுக்க முயற்சி செய்து, யாரும் தங்கள் ட்ரோனையும், உயிரையும் ஆபத்தில் ஆழ்த்திக் கொள்ள வேண்டாம்” என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த வீடியோ வெறும் பொழுதுபோக்கிற்காக ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்டதுதான் என்பதே இதன் பின்னணியில் உள்ள உண்மை.