ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்தார். இவர் தன்னுடைய தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 3-வது டெஸ்ட் போட்டிக்கு ‌முன்பாகவே ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டார். இதனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகிய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பேட் கம்மின்ஸ் தாயார் மரியா உடல் நலக்குறைவினால் திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அகமதாபாத்தில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அனைவரும் மரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு விளையாடுகிறார்கள்.