காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அதானி குறித்து மீண்டும் நான் நாடாளுமன்றத்தில் பேசி விடக்கூடாது என்பதற்காகவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறேன். என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.