காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி “நான் முதல் முறையாக அதானி பற்றி கேள்வி எழுப்பியபோதே பிரதமரின் கண்ணில் அச்சத்தை பார்த்தேன். எனது பேச்சால் பிரதமர் மோடி அஞ்சியது அவரது கண்ணிலேயே தெரிந்தது. மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று வரை அதற்கு பதில் இல்லை. ஜனநாயகம் பற்றி பேசும் பாஜக அரசு, மக்களவையில் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.