மகரம் ராசி அன்பர்களே..!
இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும்.

வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்வதும் அடுத்தவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

மனதை ஒருநிலை படுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.