ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள்.

பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை பேச வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். தொழிலில் சிரமங்களை சரி செய்யுங்கள். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும்.

பணியாளர்களை மதித்து நடக்க வேண்டும். பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். உடலுக்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பயணங்களில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். இறைவனை பரிபூர்ணமாக நம்புங்கள். யோசித்து செயல்களில் ஈடுபட வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தி, நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீல நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் பச்சை நிறம்.