தனுசு ராசி அன்பர்களே…!

மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.

ஆதாய பணவரவு கிடைக்கும். சென்னையில் நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். மாணவர்கள் தனித் திறமையால் புகழை பெறுவார்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். தாய்வழி உறவினருடன் மனக்கசப்பு உண்டாகும். குழந்தைகள் தாய் தந்தையரிடம் கேட்டு எதையும் செய்ய வேண்டும். முன்கோபத்தை தயவுசெய்து குறைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஒரு பிரச்சனை  கையாளும் பொழுது நிதானம் வேண்டும். பொது விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். தனித்திறமை வெளிப்படும். சேமிப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாள வேண்டும். திருமண வாய்ப்பு வரக்கூடும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே  சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.