வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த 21 வயது இளைஞனும், 15 வயது சிறுமியும், காதலித்து பின் வீட்டில்  சிக்கியதை தொடர்ந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் பெற்றோர்கள் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமியை சந்திக்க இளைஞஞர் நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இது பெற்றோருக்கு தெரியவர, வீட்டிற்கு விரைந்து இளைஞரை மடக்கி பிடித்தவர்கள், அவரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கண்டிக்கத்தக்க இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள்,  சிறுமியின் பெற்றோர் உட்பட 9 பேர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.