தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 20ஆம் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. Technician apprentice பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ முடித்த 21 முதல் 30 வயது உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உதவித்தொகை 8000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு TANGEDCO இணையதள பக்கத்தை அணுகவும்.