சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, என்னை பொறுத்தவரையிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் கட்சியும், அவரது அமைச்சர்களும் இல்லை என தோன்றுகிறது. முன்னதாக திருச்சியில் அமைச்சர் ஒருவர் தன் சொந்த கட்சிக்காரரை அடித்தார். மேடையை விட்டு கீழே இறங்கு எனக் கூறி அடித்தார்.

ஆனால் அவரை மேலே உட்கார வைத்ததே தொண்டர்கள்தான் என்பதையே மறந்து செயல்படுகிறார். தொண்டர்களை மதிக்காத எக்கட்சியும் உருப்படாது. அதேபோல் மற்றொரு அமைச்சர் கல்லை தூக்கி எரிகிறார். ஆகவே அதுபோன்றவர்களுக்கு சைக்காலஜிக்கல் ட்ரீட்மென்ட் தேவை” என்று அவர் கூறினார்.