தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், ‌2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போது இரண்டாம் பாகத்தையும் மணிரத்தினம் படமாக்கிவிட்ட நிலையில், டப்பிங் பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாக நடிகர் பார்த்திபன் ட்வீட் பதிவு போட்டுள்ளார். அவர் படத்திற்காக டப்பிங் பேசும் புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகமானது மிக பிரமாண்டமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.