தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக விவரங்களையும் முதலமைச்சர் இடம் கேட்டு இருக்கின்றார். வங்கக்கடலில் குறைந்தகாற்றழுத்த  மண்டலம் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்க கூடிய பாதிப்புகள் குறித்தும்,  மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மீட்பு பணிகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டு அறிந்து இருக்கின்றார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக பல்வேறு தகவல்களையும் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய புயல் பாதிப்புகள் குறித்தும்,  எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கி இருக்கின்றார்.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்ப பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு  கோரிக்கையும் வைத்திருக்கின்றார்.

உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து  ஒரு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு,  தேவைப்படும் உதவிகளை மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் உடைய கோரிக்கையை  ஏற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து இருக்கின்றார்.