அமெரிக்கா மாகாணத்தை புரட்டி போட்ட பயங்கர பனிப்புயல் காரணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனி புயல் அந்த மாகாணத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன் பனியும் கொட்டி வருகிறது.

இதனால் சாலைகள், வீதிகள் எங்கும் பழைய துகள்கள் பல அடி உயரத்திற்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதேபோல் ரயில் வழித்தடங்களிலும் பனிபொழிவால் மலைபோல் குவிந்த கிடைப்பதால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலின் போது ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.