அமெரிக்காவில் பிரபல ராப் பாடகர் கோடக் பிளாக் ஆவர். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் காரிலிருந்து 31 ஆக்ஸிகோடான் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் அவர் மீது போலீசார் போதைப் பொருள் கடத்தல் வழக்கை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் பிரபல ராப் பாடகர் கோடக் பிளாக்கிற்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.