சென்னை பல்லாவரத்தில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், ஆரியத்தை வீழ்த்தக்கூடிய சக்தி திராவிடத்துக்கு மட்டுமே இருக்கிறது. திராவிடம் காலாவதி ஆகவில்லை என்று தெரிவித்தார்.

திராவிடம் எனில் காலாவதியான கொள்கை என கூறியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. திராவிடம் என்பது காலாவதியான கொள்கை கிடையாது. சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிடம்தான். அதேபோல் வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம்.

ஆகவே ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார். யாரும் இதை பார்த்து பயப்பட தேவையில்லை என்று தெரிவித்து உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.