தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  ஓசூரில் பேசும் போது கூட குறிப்பிட்டேன். இன்னைக்கு காங்கிரஸ் நம்முடைய பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் நமக்கு பதிலா அவங்களே  பாதிப்பிரச்சாரம் பண்றாங்க. அசோக் கெலாட்  சொல்றாங்க…..  மோடி அவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கு எல்லாம் போறாங்க. எல்லா நாடும் எவ்வளவு பெரிய வரவேற்பு பெருமையா இருக்கு. சொன்னது நாம் இல்லை, அசோக் கெலாட் சொல்லுறாங்க.

டிஎஸ் சிங்தியோ சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியினுடைய துணை முதல்வர் சொல்கிறார். மோடி ஆட்சியில் பாரபட்சமே காட்ட மாட்டாங்க.  எவ்வளவு பணம் கேட்டாலும், கொடுப்பாங்க…. காங்கிரஸ் பிஜேபி எல்லாம் பார்க்க மாட்டாங்க. சொன்னது யாரு ?  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சத்தீஸ்கனுடைய துணை முதல்வர். கார்த்திக் சிதம்பரம் அப்ப அப்ப உண்மையை சொல்லி மாட்டிகிடுறாரு… நீட்டு நல்லது என சொல்லுவாரு… இது நல்லது என சொல்லுவாரு….

இப்ப புதுசா ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார். மோடிக்கு எல்லாம் யாரும் மேட்ச் இல்ல. அந்த சீனியர்  செய்தியாளர் கேட்குறாங்க… அய்யயோ… இது பிரச்சனையா வருமே, என நினைச்சுட்டு அவங்க என்ன பண்றாங்க…. ஒருவேளை கரெக்ட்டா தான் சொன்னாரா ?  இல்ல  தெரியாம உண்மைய சொல்லிடாரா என்பதற்காக… என்க ராகுல் காந்திக்கும்  நிகர் இல்லையான்னு சொல்றாரு. அதான் சொல்லுறேன் பாருங்க…. யாருக்கும் நிகர் இல்லைன்னு சொல்லுறாரு…அதான் வர வர இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அவுங்களே நமக்கு பதிலா பேச ஆரம்பிச்சிட்டாங்க.  அவங்க யாரோட கம்பேர் பண்றாங்க ? ராகுல் காந்தியோட கம்பேர் பண்றாங்க என தெரிவித்தார்.