தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இயங்கி வருகிறது இந்த பாரின் அருகே அரசு அனுமதியுடன் செயல்படும் மதுபான கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 12 மணிக்கு முன்பே இருவர் மது வாங்கி அருந்தி உள்ளனர்.

அதில் ஒருவரான 60 வயதுடைய குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட மற்றொருவரான விவேக் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த விவேக் என்பவரும் உயிர் இழந்துள்ளார்