அகமதாபாத் to திருச்சி இடையில் இயக்கப்பட்ட வாராந்திர ரயில் சேவையானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் இருப்பதாவது “அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமைதோறும் காலை 9:30 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்:09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து பிப்.2,9,16,23 மற்றும் மாா்ச் 2,9,16,23,30 போன்ற தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்பட இருக்கிறது.

இதையடுத்து மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து அகமதாபாத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5:45 மணிக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிப். 5,12,19,26, மாா்ச் மாதம்-5,12,19,26 மற்றும் ஏப்.2 ஆகிய தேதிகளில் (9 சேவைகள்) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் வழியே இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன் பதிவு இன்று(பிப்.2) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.