அஜித்தின் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதன் விளைவாக திரையுலகை சார்ந்தவர்களும் விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமானவர்களும் அஜத்தின் பெரிய வாய்ப்பு போய் விட்டது என்று கவலை கொள்ள வேண்டாம் என்றும் அதனை விட பெரிய வாய்ப்பு கிடைக்கும் என கூறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தானாக முன்வந்து படம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கின்றார்.

மேலும் விஜய் சேதுபதி தானாக முன் வர காரணம் குறித்து பிரபல யூடுப்பர் ஒருவர் கூறுகையில், அரண்மனை 4 படத்தில் சம்பளப் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் அவரது மார்க்கெட்டும் முன்பு மாதிரி இல்லை என்பதால் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனிடம்  கேட்டிருப்பார் என்றும் கூறினார்.