உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சசிகலா ஜெயலலிதா உடனான தனது பயணங்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும் ஆனால் திமுக ஆட்சியில் தற்போதைய நிலையை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று தெரிவித்தார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.