தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி சென்று, அங்கு மத்திய பாதுகாப்புதுறை செயலாளர் அஜய் தோவலை சந்தித்து பேசியுள்ளாராம்.

சென்னை கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்க அஜய் தோவல் தான் பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்த டிஜிபி நியமனம் குறித்து பரிந்துரை செய்ய வேண்டுமென அஜய் தோவலை சந்தித்து சங்கர் ஜிவால் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.