தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர தயாராகிவிட்டது என தூத்துக்குடியில் அண்ணாமலை பேசி உள்ளார். அண்ணாமலையின் பேச்சு அவர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறப் போகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

தொண்டர்கள் மத்தியில் பாஜக தலைவர் அண்ணாமலை மேலும் பேசியதாவது, பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது என அவர் கூறினார்.