தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் நடிகை நயன்தாராவின் மார்க்கெட் சரிவதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவலை கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் படம் பற்றிய அறிவிப்புகள் பெரிதாக வரவில்லை. நடிகை நயன்தாரா தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்த கனெக்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

தன்னுடைய மார்க்கெட் மீதுள்ள நம்பிக்கையால் கம்மி பட்ஜெட்டில் படம் எடுத்து அதை அதிக விலைக்கு ஓடிடி தளத்தில் நயன்தாரா விற்க நினைக்கிறார். சினிமாவை நயன்தாரா தவறாக பயன்படுத்த நினைத்தது தான் அவருடைய மார்க்கெட் சரிவதற்கு காரணம் என்று கூறியுள்ளார். அதோடு பணம் சம்பாதிப்பதை மட்டும் தான் நயன்தாரா குறிக்கோளாக வைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை எனவும் அவரின் படங்கள் குறித்து அறிவிப்புகள் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது நயன்தாரா, ஜவான், இறைவன், நயன்தாரா 75 மற்றும் சித்தார்த், மாதவனுடன் சேர்ந்து ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.