தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகையான காக்கிநாடா சியாமளா நடிகை குஷ்பூ மற்றும் பிரபு ஆகியோருக்கு இடையே இருந்த உறவு குறித்து பேசி உள்ளார். நடிகை குஷ்பூ சின்னத்தம்பி படத்தில் பிரபுவுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. நடிகர் பிரபுவுடன் 4 வருடங்கள் குஷ்பூ ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

பிரபு மற்றும் குஷ்பூ திருமணம் செய்து கொண்ட நிலையில் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால் சிவாஜி கணேசன் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பிரபுவின் முதல் மனைவியும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் குஷ்பு மற்றும் பிரபு பிரிந்தனர். பிரபுவை பிரிந்த பிறகு நடிகை குஷ்பூ கடும் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், படிப்படியாக அதிலிருந்து மீண்டு இயக்குனரான சுந்தர்சியை கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரு மகள்கள் இருக்கிறார்கள். மேலும் நடிகை குஷ்பு மிகவும் நல்ல பெண் எனவும் நடிகை குஷ்பூ மற்றும் காதலுக்கு பிரபுவின் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் தான் பிரிந்தனர் எனவும் கூறியுள்ளார்.