மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மஞ்சு வாரியருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எரூர் என்ற ஊரில் அண்மையில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் அவரை பார்க்க ரசிகர்கள் பெரும்பாலானோர் திரண்டனர். மேடையில் இருந்தபடியே அவர்களுடன் பிரம்மாண்ட செல்பி எடுத்துக் கொண்ட மஞ்சு வாரியர் பின், அங்கிருந்து காரில் புறப்பட்டார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அச்சாலையில் அவரது கார் மெதுவாக சென்றது.

இந்நிலையில் காருக்கு பின்னால் இளம்பெண் ஒருவர் ஓடிவருவதை பார்த்ததும் மஞ்சுவாரியர் அவருக்கு Hii சொன்னார். எனினும் தொடர்ந்து அப்பெண் காரை துரத்தியபடி ஓடிவந்தார். அதன்பின் மஞ்சு வாரியர் காரை நிறுத்தி அந்த பெண்ணிடம் விபரத்தை கேட்டார். அந்த பெண் “தனது தாய் உங்களின் தீவிர ரசிகை எனவும் இன்று அவர் பிறந்தநாள் என்பதால் தொலைபேசியில் நீங்கள் அவருக்கு வாழ்த்து சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடைவார் எனவும்  கூறியுள்ளார்.

உடனடியாக மஞ்சு வாரியர் தனது உதவியாளரிடம் அப்பெண்ணின் போன் நம்பரை கொடுக்குமாறும் தான் வீட்டிற்கு சென்ற பிறகு போனில் அழைத்து உங்கள் தாய்க்கு வாழ்த்துக்கள் கூறுவதாகவும் உறுதியளித்துவிட்டு புறப்பட்டார். இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த அந்த பெண் மஞ்சு வாரியரின் இந்த அன்பை அங்கிருந்த மீடியாக்களிடம் பகிர்ந்துகொண்டார்.