
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வை ஆவணப்படுத்தி netflix தளத்தில் வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து வாடகை தாய் மூலம் இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக வதந்திகள் பரவியது. மேலும் சில செய்தி நிறுவனங்களும் செய்திகளில் வெளியிட்டன. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் உடன் வேடிக்கை பார்க்கும் கோணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் எங்களை குறித்த வதந்திகளை பார்க்கும்போது எங்களின் ரியாக்சன் என நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதி செய்துள்ளார்.