தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.‌ நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் இயக்குனரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் பப்லு, யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை மலேசியாவில் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.