தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கம் புதிய படம் போன்றவற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.

அப்போது நடந்த பயங்கர சம்பவம் குறித்து இயக்குநர் தமிழ் மனம் திறந்திருக்கிறார். படப்பிடிப்பில் காளை ஒன்று தமிழின் மேல் பாய்ந்து பத்து அடி தூரம் தூக்கி வீசிவிட்டதாம். அதன்பின் சூர்யாவை முட்டிவிடவும் பாய்ந்திருக்கிறது. இந்த விபத்தில் இருந்து சூர்யா நூலிழையில் தப்பித்திருக்கிறார்.