தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் ஏப்ரல் அல்லது மே தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறாராம். இந்த படம் பான் இந்தியா திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. மேலும் சீதாராமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.