சென்னை வெள்ள பாதிப்பை அரசுகளில் குறை கூற வேண்டிய நேரமில்லை நாமெல்லாம் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று சொன்னது தொடர்பான கேள்வி குறித்து பதில் அளித்து தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் , அதிமுகவின் பொதுச்செயலாளருமான  எடப்பாடி கே.பழனிச்சாமி, அவரெல்லாம் ஒரு அரசியல்வாதியாக நான் கருதவில்லை. அன்னைக்கு என்ன சொன்னாரு ? எம்பி தேர்தல் வருது.

திமுக சார்பு நிக்க போறாரு.அதற்காக இப்படிப்பட்ட பேசி இருக்கிறாரு.  மாத்தி பேசி இருக்காரு. பச்சோந்தி கூட கொஞ்ச நேரத்துல கலர் மாறும். அதுக்கும் மேல விரைவாக கலர மாறுகின்ற தலைவர் தான் அவரு. ஏன்னா  அவருடைய கட்சியில் பல பேர் வெளியில போயிட்டாங்க. அவர் ஒருத்தர் தான் இப்ப இருக்கார்னு நினைக்கிறேன். அதனால அவருக்கு கொடுக்கிற கருத்துக்கு நாம செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை என்று நாம் கருதுகிறேன் என தெரிவித்தார்.