தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எப்படியாவது மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையாக இருக்கும் நிலையில் தற்போது அதெல்லாம் நடக்காது என்பது போல் பிரபல விமர்சகர் உமர்சந்து பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது முறையாக விவாகரத்து கேட்டு சென்னை சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். நடிகர் தனுஷுக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருக்கிறது. இதனால்தான் தற்போது ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் உமர் சந்துவின் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.