ஒரு வயது குழந்தையைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயா, பணியின் போது தூங்கிப் போனதால் அக்குழந்தை தவறி படிக்கட்டுகளில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளத் தவறிய இந்த அலட்சியமான செயல், அந்தப் பெற்றோரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அக்குழந்தை விபத்துக்குள்ளானதற்குத் துளியும் வருத்தப்படாத அந்த ஆயா, அந்த நாள் முழுமைக்குமான 10 மணி நேர சம்பளத்தையும் முழுமையாகக் கேட்டு அநாகரிகமாக நடந்துகொண்டது அனைவரையும் கோபமடையச் செய்துள்ளது.

“>

 

குழந்தையை முறையாகக் கவனிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டது மட்டுமல்லாமல், பொறுப்பற்ற முறையில் ஊதியம் கோரிய அந்த ஆயாவின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.