தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாரிமுத்து தற்போது பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் விஜய் பற்றி சொன்ன விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் அஜித் அவருக்கு யாராவது நல்லதோ அல்லது கெட்டதோ செய்தால் அதை உடனே மறந்து விடுவார். அது அஜித்தின் நல்ல குணம்.‌ ஆனால் விஜய் அப்படி கிடையாது. அவருக்கு யார் எது செய்தாலும் நேரம் பார்த்து அவருக்கு டபுள் மடங்காக கொடுத்து விடுவார். இது விஜயிடம் இருக்கும் கெட்ட குணம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் மாரிமுத்துவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது ‌