தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் செல்லும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால் 4 வருடங்கள் கழித்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து குறித்து பிரபல விமர்சகர் உமர் சந்து‌ சொன்ன ஒரு விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்திரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.