ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். இப்போது பான்-ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்து உள்ளது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023-க்குள் தங்களின் ஆதார் கார்டை பான் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

முன்பாக இதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மார்ச் 31, 2023 வரை வைத்திருந்தது. இப்போது இந்த தேதியானது ஜூன்-30 ஆக நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்ற 2020-ம் வருடம் பான்கார்டு -ஆதார் இரண்டையும் அனைவரும் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.