90s களில் மிரட்டல் வில்லனாக நடிப்பில் அசத்தி வந்தவர்தான் ஆனந்த்ராஜ். இவர் கடந்த 1987 ஆம் வருடம் வெளியாகிய “தாய் மேல் ஆணை” எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ஆனந்த்ராஜ் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார்.

வில்லனாக நடித்து வந்த இவர் அண்மை காலமாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். ஆனந்த்ராஜ் கடந்த வருடம் பிரின்ஸ், கோப்ரா, இடியட், நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் பார்க்காத ஆனந்த்ராஜின் அழிகிய குடும்ப புகைப்படமானது தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.