சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடைபெற்ற ஒய்ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டு விரைவில் படமாக உள்ள அந்த நாடகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கடந்த 47 வருடங்களுக்கு முன்பாக ரகசியம் பரம ரகசியம் என்ற நாடகத்தை பார்ப்பதற்கு சென்றேன். அரை மணி நேரமாக காத்திருந்தும் என்னை உள்ளே விடவில்லை. ஆனால் தற்போது நான் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன். இதுதான் காலத்தின் விளையாட்டு. என்னுடைய மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியது ஒய்ஜி மகேந்திரன்.

அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நான் நடத்துனராக இருக்கும்போது ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பேன். எவ்வளவு மது குடிப்பேன் என்று தெரியாது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாமிசம் தான் சாப்பிடுவேன். என்னை திருத்தி நல்வழப்படுத்தியது என்னுடைய மனைவிதான். இவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தால் அவர்களால் 60 வயதுக்கு மேல் வாழ முடியாது. ஆனால் தற்போதும் நான் நலமுடன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய மனைவி லதா மட்டும்தான் என்று கூறினார்.