
உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற அளவுக்கு டிராக்டரை தூக்கி ஸ்டண்ட் செய்கிறார்.
அந்த சமயத்தில் டிராக்டர் உயரத்தில் இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் திடீரென கவிழ்ந்தது. ஆனால் அந்த இளைஞருக்கு காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானதும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த வீடியோ ஆசிஷ் குமார் என்ற பெயரில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
यूपी : यूपी : शाहजहांपुर में स्टंटबाजी करते समय ट्रैक्टर पलटा
◆ वीडियो हुआ सोशल मीडिया पर वायरल
◆ पुलिस ने वीडियो का संज्ञान लेते हुए मामले की जांच में जुटी#Shahjahanpur | #TractorStunt | #Accident #ViralVideo | #UttarPardesh pic.twitter.com/TgFVVPDPm1
— News24 (@news24tvchannel) June 29, 2025
அந்த கணக்ராக்டர் மூலம் பல ஸ்டண்ட் வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. ஸ்டண்ட் செய்த வாலிபர் குறித்து இன்னும் தகில் டிகவல்கள் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கையில், இளைய தலைமுறை சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் புகழுக்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற செயல்களை இளம்தலைமுறையினர் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளனர். அதோடு இந்த வீடியோவில் காணப்படும் இளைஞனை அடையாளம் கண்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் தகவல்கள் தெரிய வராத நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.