உத்தரப்பிரதேசத்தின் அமிதி மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வகுப்பறையில் விரிவுரை நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஏசியிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்தது. பாம்பை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், சிலர் பயத்துடன் விரைந்து வெளியேறினர். பாம்பு வெளியே வந்ததும் மாணவர்கள் பீதியடைந்து கூச்சலிட்டு தங்கள் புத்தகங்கள் மற்றும் பைகளுடன் வகுப்பறையை விட்டு ஓடினர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. பாம்புகளை கையாளுவதில் தகுதிபெற்ற நிபுணர்கள் அழைக்கப்பட்டு, பாம்பு பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை, எனினும், சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A snake made an unexpected appearance in a lecture hall at Amity University in Noida, leaving students in shock #Amity #AmityUniversity #AmityNoida #Noida pic.twitter.com/Xgadc0Fmgm
— Aaquil Jameel (@AaquilJameel) September 20, 2024
