விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் லியோ. இதன் முதற்கட்ட சூட்டிங் சென்னையில் ஜனவரியில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்க்காக படக்குழு காஷ்மீரில் இருக்கிறது. விஜய், திரிஷா உள்ளிட்ட மொத்த படக் குழுவும் தற்போது காஷ்மீரில் தான் இருக்கிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மை டியர் மிஷ்கின் சார் உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் இருப்பதை நான் எனது அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் கூறினாலும் போதாது. நான் உங்களுக்கு எப்போதும் போதுமான அளவு நன்றி கூற முடியாது. இருப்பினும் ஒரு மில்லியன் நன்றிகள் என பதிவிட்டு இருக்கின்றார். இவரின் இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது