காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி. இவர் தற்போது ED, NIA போன்ற கத்திகளை எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக வைத்திருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் ராவத் என இதுவரை சிறையில் அடைக்கப்பட்டு வரை பார்த்தால் எதிர்க்கட்சிகளின் கழுத்தில் பாஜக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற கத்திகளை வைத்திருப்பது தெளிவாக தெரிய வருகிறது. பாஜகாவுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்கள் குறி வைக்கப்படுவார்கள். இந்த உண்மை உங்களுக்கும் புரியும். மேலும் இனி பாஜகவின் இலக்கு முஸ்லிம்களாக மட்டுமே இருக்காது என்று கூறியுள்ளார்.