பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள் ட்ரோன் மூலம் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பின்னணி பாடகர் பென்னி தயாள் கலந்து கொண்டார்.

மேடையில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பாடிக்கொண்டிருந்த போது மேலே பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா அவரின் தலையை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் தற்போது குணமடைந்து வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.